அங்காடித் தெரு







ரங்கநாதன் தெரு... எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு இடம். 'பிழைத்துக்கொள்ளலாம்' என்பது மூன்று வேளை முழுதாக சாப்பிடுவது. இதைக் கொஞ்சம் தெளிவாகவே காட்டும் படம்தான் அங்காடித் தெரு.


படிப்பில் திறமை இருந்தும் வசதி இல்லாததாலும் தந்தையின் இழப்பினாலும் ஒரு மாணவனின் வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதே கதை.  


எளிமையான கதை மட்டுமல்ல மிகவும் பொதுவான மற்றும் உண்மையில் நடக்கும் கதையும் கூட. ரங்கநாதன் தெருவில் பெரும்பாலான கடைகளில் நாம் பதினெட்டு வயதிற்கும் குறைவான வயதுடைய சிறுவர் சிறுமிகளை நிச்சயம் பார்க்கலாம். ஆனால் அவர்களை விசாரித்தால் அவர்கள் இருபதை ஒட்டிய ஏதோ ஒரு வயதைச் சொல்வார்கள்அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உத்தரவின் படி. சிரித்துக் கொண்டே வேலை பார்த்தாலும் அதில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் கண்டிப்பாக இருக்கும்.



 "அப்பா அம்மா இல்லாத பையனாஅக்கா தங்கச்சி நிறைய இருக்கிற பையனா பாத்து எடு. அப்பதான் சொல்றத கேட்டுகிட்டு பேசாம வேலை பாப்பான்" என்ற வசனம் எனக்கு சென்னை கிண்டியில் இருந்த ஒரு BPO நிறுவனத்தை ஞாபகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் Recruitment strategy: அங்கு ஒரு சில பணிகளுக்கு நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த, சுமாரான திறமை உடையவர்கள் என்று அவர்கள் நம்பக்கூடிய அதிலும் குறிப்பாக பெண்களை அதிகமாக தேர்ந்தெடுப்பார்கள். அடுத்தடுத்த வருடங்களில் அங்கு வேலை கொடுத்ததே நாம் பெற்ற பிறவிப் புண்ணியம் போல அவர்களை நடத்துவார்கள். பல நிறுவனங்களுக்கு மனிதர்களும் 'கம்பெனி' லாபம் பார்க்க உதவும் ஒரு கருவி. படித்தவர்கள் நிரம்பிய இடம் என்பதாலும் சட்டங்களுக்கு உட்பட்டே நடக்க முடியும் என்பதாலும் பல இடங்களில் பெரிய பாதிப்பில்லை. ஆனால் படிப்பு குறைவாகவும் போதிய வெளிப்பழக்கங்கள் இல்லாதவர்களும் படும் பாட்டை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.      


 "பையன் அவர மாதிரியே இருக்கான் பாய்! " என்று ஊனமுற்ற குழந்தையை காட்டி மகிழும் பெண் நம் சமூகத்தின் பார்வைக்குறைபாட்டை சுட்டிக் காட்டுகிறார்.  
இயக்குனர் வசந்தபாலன், ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக அமைத்திருக்கிறார். ஒரு அறிமுகம், தேவையைப் பொறுத்து விரிவாக்கம், ஒரு முடிவு, என கேரக்டரை நன்கு வடிவமைத்திருக்கிறார். கதையிலும் அதன் மனிதர்களிலும் நாம் ஊன்றி விடுவதால் சுமாரான இசை ஒரு குறையாகத் தெரியவில்லை. "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" ஒரு சிறந்த கவிதை, நா. முத்துக்குமாரினுடையது. சோகமான படம் என்றபோதும் சுறுசுறுப்பாகவே போகிறது. 


கால்களை இழந்துவிட்டாள் என்றபோதும் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதாக ஹீரோ எடுக்கும் முடிவுக்கு தியேட்டர் (சென்னை PVR) முழுவதும் விசில் சத்தம். 


தெருவில் நின்று பொருள் விற்பவர்களை நிச்சயம் இனிமேல் அலட்சியமாக கடந்து செல்ல முடியாது. 

காலம்

இப்போதெல்லாம்
பெருமூச்சு விடாமலே
கடக்க முடிகிறது
அந்த ரயில் நிலையத்தையும்
மண மண்டபத்தையும்

அவள் குழந்தைக்கு
அநேகமாக ஒரு வயதிருக்கும். 

Stone wheel in Pazhayarai

Pazhayarai inside


Pazhayarai inside
Originally uploaded by sekarkraj

As old as.....


As old as ...
Originally uploaded by sekarkraj
Pazhayarai, is the ancient capital of Chola empire. This one is taken from the temple in Pazhayarai.

ஸ்ரீமான் சுதர்சனம்

சமீபத்தில் நான் ரசித்துப் படித்த ஒரு புத்தகம், ஸ்ரீமான் சுதர்சனம். மறைந்த திரு. தேவன் அவர்களால் எழுதப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு (அல்லது அதற்கும்) முன்பு எழுதப்பட்டது . தேவன் அவர்களைப் பற்றி தெரியாதவர்களுக்கு:  "துப்பறியும் சாம்பு", எனும் கதாபாத்திரம் உங்களுக்கு பரிச்சயமானதாயிருந்தால் தேவனும் உங்களுக்கு பரிச்சயமானவர்தான். தேவனின் மிகச்சிறந்த ஒரு படைப்பு, "துப்பறியும் சாம்பு". தேவன் பொதுவாகவே நகைசுவைக்குப் பெயர் பெற்றவர். இந்த வருட புத்தகக்கண்காட்சியில் தேவனின் பல படைப்புகளை காண முடிந்தது (நன்றி: கிழக்கு பதிப்பகம்). நீண்ட நாட்களாகவே இவருடைய புத்தகங்களுக்காக காத்திருந்தேன் என்பதால் இருந்தவற்றுள் என்னைக்கவர்ந்த "ஸ்ரீமான் சுதர்சனத்தை" வாங்கினேன். படிக்கும்போதுதான் உணர்ந்தேன், தேவனின் மற்ற புத்தகங்களையும் வாங்கி வராத என் தவறை.

"குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் - இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?" இந்தக் குறிப்பே என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் புத்தகத்தின் வயது என் வயதைக் காட்டிலும் இரண்டு மடங்கு இருக்கும். ஆனால் இதைப் படிக்கும்போது இவ்வளவு பழைய புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கூடத் தோன்றவில்லை. ஒரே காரணம் இதில் விளையாடியிருக்கும் நகைச்சுவை. ஒரு தனியார் அலுவலகத்தில் குமஸ்தாவாக வேலை பார்க்கும் சுதர்சனம் தன் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக தவறுகள் செய்ய முற்படுவதும், ஆனால் அதன் பிறகு அதற்காக உள்ளுக்குள் பயந்து நடுங்குவதும் நம்மை நிஜமாகவே சிரிக்க வைக்கின்றன. குருதிப்புனல் படததில் வரும் மிடில் க்ளாஸ் மனசாட்சி பற்றிய காடசி நினைவுக்கு வருகிறது.

ஒரு தவறு செய்பவன்  மேலும் மேலும் தவறுகள் செய்ய அவனுடைய முதல் தவறும் மற்ற சூழ்நிலைகளும்  எந்த அளவுக்கு காரணமாகின்றன என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறார், ஆசிரியர்.  மற்றபடி கோள் மூட்டும் பக்கத்து மேஜைவாசி, பந்தா பேர்வழி, வேலை செய்யாமல் நேரம் ஓட்டுபவர் போன்ற மற்ற விஷயங்களுக்கும் எந்தக் குறையுமில்லை.  

மற்றவர் குறித்த மனிதர்களின் மனநிலை என்பது காலத்தைப் பொறுத்து ஒன்றும் பெரிய அளவில் மாறிவிடாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த புத்தகம். வாடகைக்கு வீடு பார்ப்பதும் பிறகு அங்கு குடியேறுவதுமான அந்த நிகழ்வுகள் நிஜமாகவே நம்மை யோசிக்க வைக்கின்றன.

பொருட்களைக் கொடுத்து விட்டால் பணத்தை நிச்சயம் கறந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே கடனுக்கு பொருட்கள் தரும் அந்த பக்கத்துக்கு வீடு அம்மா இந்த நாட்களின் கிரெடிட் கார்ட்-களை ஞாபகப்படுத்துகிறார்.

கொஞ்சம் பழைய காலத்தை உணர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தவிர, மற்றபடி மிகவும் படிக்கத்தகுந்த புத்த்தகம்.






தவிட்டு அடுப்பு (Rice hull stove).


இதைப்பற்றி யாரேனும் கேள்வி பட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. ஒன்றும் பெரிய அறிவியலோ அல்லது சுவாரஸ்யமோ இல்லாத ஒரு தொழில் நுட்பம்தான் இருந்தாலும் என் குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்துவதாலேயே அதைப் பற்றி எழுதுவதும் எனக்கு சுகமாக இருக்கிறது. அது என்ன தவிட்டு அடுப்பு: முன்பெல்லாம் வீடுகளில் பயன் படுத்தப் பட்டு வந்த சுடுமண் அடுப்பு. அதில் விறகு வைப்பதற்கான பெரிய திறப்புக்கு பதில் வட்டமான ஒரு துளை மட்டும் இருக்கும். அடுப்பின் உட்புறமாக ஒரு பாட்டிலை வைத்து அதனைச்சுற்றி தவிடைக் கொட்டி லேசாக இடிக்க வேண்டும். கொட்டப்படும் தவிடு அடுப்பின் துளை வழியே வெளியேறிவிடாமல் இருக்க ஒர் துணிப்பந்தை வைத்து அந்த துளையை அடைத்து விடலாம். இடித்து முடித்த பிறகு பாட்டிலை எடுத்து விட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க வேண்டியதுதான். ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் எரியும் என்பதால் ஒரு சிறு விறகின் உதவியுடன் அனைத்து சமையலையும் என் அம்மா முடித்து விடுவார். நான் வளரும் முன்பே அதன் பயன்பாடு நின்று போய் நாங்க்ள் எரிவாயுவுக்கு மாறி விட்டோம். இப்போது மின் அடுப்பு பயன்படுத்துவதைப் பற்றி அவர் யோசித்துக் கொண்டிருக்கிறார். இளமையோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தவிட்டு அடுப்பின் நினைவு என்னைக் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்துகிறது.

கலிங்கத்துப் பரணி

இரண்டு வருடங்களுக்கு முன்பு கலிங்கத்துப் பரணி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் ரசித்த சில பாடல் வரிகளை புதுக்கவிதையாக்க முயன்றேன். இதோ...

கனவினில் ஊடல்
கொண்டதென்று
காலையில் மனத்தொடுச்
சண்டையிடுவாய்

உனைப்பற்றியிருக்கும்
தாவணியை நான் பற்ற
நின்ற இடத்தில நின்று
விட்டு விடு என்பாய்
குழம்பிப்போவோம்
நானும் தாவணியும்

கனவில் என்
கை பட்ட இடங்களில்
காலையில் தேடுவாய்
நகங்களின் காலடிகளை

உண்மை எனும்படி
ஒரு பொய்த்தூக்கம் போடுவாய்
எழுப்பும் நோக்கத்தில்
இடையில் கை வைத்தாலோ
இன்னும் கொஞ்சம் இயல்பாய் நடிப்பாய்

உடையில் ஒரு கை ஓய்வெடுக்க
குழல் மறு கையில் ஓய்வெடுக்க
உறங்கும்போதே
தோன்றுவாய் அழகாக
எனில்
எழுந்து நீ நடந்தால் ...

பஞ்சத்தில் உழன்றவன் பெற்ற
பணக்குவியல் போல
யாருமில்லா இடத்தில்
பார்த்து மகிழ்வாய்
இரவின் குறிகளை

பொல்லாத கோபம் தீர்ந்து
புன்னகை சிந்தும்போது
கண்களில் இயற்றுவாய்
துளி கண்ணீர்க் கவிதையை.

WOMEN BELITTLE THEMSELVES

Malathi Rangarajan in her review for the movie Ayirathil Oruvan in The Hindu has written as “…..Did he have to waste more than two precious years on a project (gigantic no doubt) that has a baffling story, which only has him playing second fiddle to Reemma Sen? Battered, bruised, abused and tossed about by the girls, you expect him to retaliate with much vigour. He doesn't!”.

Even I, as a man, was quite taken aback by the male chauvinism of your statements. This is one of the very few movies, which has given an opportunity for women actors to prove their mettle. And why must the hero always hog the limelight? Why can’t he decide to do a role for the sheer love of the art and not depending on how much screen time he is given?

Are you reviewing the movie or his decision? Are you reviewing a work of art or the commercial/financial benefits that this venture brings (or not) to an artist?

What do you want from heroines, Malathi?: The great efforts that heroines go to in order to impress the hero (who, most often, is unemployed/rowdy/social outcast)? Five songs with the hero with idiotic movements and maximum exposure!

What is the problem with the Tamil spoken in the movie? “…. Just when you decide they have no language as such, the king sings, recites poetry and speaks fluently, of course, in a dialect which even a seasoned Tamil filmgoer finds odd!” Do you want the Cholas to speak Tanglish as we do? The language was in keeping with the times and not diluted to suit uninformed viewers.

It really needs courage to make this kind of a movie. How long can we continue to ape Hollywood?